states

விளக்கம்

நேற்றைய தீக்கதிர் (3.5.2023) 5ஆம் பக்கத்தில் வெளியான தோழர் டி.கே.ரங்கராஜன் மே தின உரையில் சில பகுதிகள் தவறான பொருளில் அமைந்து விட்டது.  “பாஜக அல்லாத மாநில அரசு களை ஒன்றிய பாஜக அரசு சீர்குலைக்க முயல்கிற போது மாநில திமுக அரசை  பாதுகாக்க வேண்டும் என்று விரும்பு கிறவர்கள் நாங்கள். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ப தற்காக இணைந்து போராடி வரு கிறோம். ஆனால் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழில்துறை தொடர்பான சட்டம் இந்த அரசை ஆத ரிக்கும் கட்சிகளுக்கும் கூட நெருடலை  ஏற்படுத்தியது. இத்தகைய சட்டங்களை கொண்டு வரும்போது விரிவான ஆலோ சனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து. இந்நிலையில் தொழிற்சங்கங்களும், தோழமைக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் சுட்டிக் காட்டிய நிலையில், இந்தச் சட்டம் நிறுத்தி  வைக்கப்பட்டதும், பின்னர் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டதும் வர வேற்கத்தக்க ஒன்று” என்பதே டி.கே.ரங்க ராஜன் உரையில் மையக் கருத்தாக அமைந்திருந்தது என்பதை தெரி வித்துக் கொள்கிறோம்.

-ஆசிரியர்