சென்னை, ஜூலை 1- தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான ஆணையை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜூன் 30 அன்று ஆன்லைனில் நடைபெற்றது. 2012 முதல் தற்போது வரை பல்லாயிரக் கணக்கானோர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசின் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். 2012-13 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு சிலருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டு அதிக மான பேர் காத்திருப்புப் பட்டியலில்உள்ளனர்.
தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்த தமிழக அரசின் அறிவிப்பால் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் இளை ஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த ஜூன் 28 முதல் சென்னை யில் உள்ள பள்ளிக் கல்வி வளாகம் முன்பு பல நூற்றுக்கணக்கான பேர் தற்போது வரை குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, பணிநியமனத்தில் முறைகேடு கள் நடப்பதாகச் சொல்லி தற்காலிக ஆசி ரியர் பணியிடங்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது. தமிழக அரசு தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கான ஆணையை முழுமை யாக திரும்பப் பெற்று நிரந்தரப் பணியிடங் களாக நிரப்பவும், ஓய்வு பெற்றவர்களை நிபந்தனையின் பேரில் மீண்டும் பணிய மர்த்தும் நடவடிக்கையையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டம் தோறும் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.