states

கருமுட்டை விற்பனை விவகாரம்: சட்டத்தை அமல்படுத்த குழு அமைப்பு

சென்னை,ஜூன் 11- கருத்தரிப்பு மையங்களில் வழங்கப் படும் பல்வேறு வகையான சிகிச்சை களைக் கண்காணிக்க இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை ஒன்றிய அரசு சென்ற ஆண்டு  அமல்படுத்தியது. ஆனால், தமிழ்நாடு  உட்பட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்படா மல் இருந்தனர். இந்நிலையில், ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தற்போது இனப் பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக சுகாதார துறை அமல்படுத்தவுள்ளது. இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை கூடுதல் செயலர் தலைமையிலான இந்தக் குழுவிற்கு குடும்பநலத் துறை இயக்குநர் உப தலைவராக இருப்பார். மேலும், மாதர் அமைப்பை சேர்ந்த வசுதா ராஜசேகர், சட்டத்துறை உதவி செயலர், மகப்பேறு பேராசிரியர் மோகனா உள்ளிட்டோர் குழுவில் இதர உறுப்பினர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தின் படி, 23 முதல் 35  வயதுக்குள்ளான பெண்களிடம் இருந்து  மட்டும்தான் கருமுட்டைகள் வாங்க வேண்டும், வாழ்நாளில் ஏழு கருமுட்டை கள் வரை மட்டுமே கொடுக்க வேண்டும்  உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப் பட்டுள்ளது.