சென்னை, ஜூன்3- நிலக்கரி பற்றாக்குறைக்கு ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே காரணம் என்று பொதுத்துறை மற்றும் பொது சேவைக்கான மக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணை யம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்திக்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு எடுத்து வேறுப யன் பாட்டுக்கு செலவிட்டுள்ளது. தவிர, உரத் தொழிற்சாலையில் நிதியை முதலீடு செய்யுமாறு கோல்இந்தியா நிறுவனத்தை ஒன்றிய அரசு நிர்ப்பந்திக்கிறது. இந்த நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பதவியை நிரப்பவில்லை. நிலக்கரி சுரங்க மேலாளர்கள் ‘தூய்மை இந்தியா’ இயக்கப் பணிகளை மேற்கொள்ள அனுப்பப்படுகின்றனர். இதனால் நிலக்கரி சுரங்கப் பணி தொய்வடைகிறது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் உள்ள நிலையில், மின்சாரம் மற்றும் நிலக்கரித் தேவையை முன்கூட்டியே அறிந்து, தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொண்டு போய் சேர்த்திருக்க வேண்டும். இவ்வாறு அனு மானிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. இப்பொறுப்பை நிறைவேற்றுவதில், ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக நிலக்கரி பற்றாக்குறை என்ற நெருக்கடியில் இந்தியாவை தள்ளியுள்ளது. இந்நிறுவனத்தின் நிதியும், அலுவலர்களும் மடைமாற்றம் செய்யப்படாமல் இருந்திருந்தால் 11 விழுக்காடு உற்பத்தி அதிகரித்திருக்கும். எனவே, நிலக்கரி பற்றாக்குறை என்ற நெருக்க டிக்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் தவறான முடிவுகளே காரணம். இந்த சூழலில், தங்களுக்கு ஆதரவான நிறு வனத்தின் வெளிநாட்டு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பினை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். இப்போது மாநில அரசுகள் கட்டாயமாக மாதம்தோறும் மொத்த தேவையில் 10 சத வீதத்தை வெளிநாட்டில் இருந்துஇறக்குமதி செய்துகொள்ள வேண்டும்என்று ஒன்றிய அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.