states

1000 புத்தகங்களை நூலகத்திற்கு வழங்கிய 7 ஆம் வகுப்பு மாணவி

சென்னை, ஜூன் 24-  சென்னை நொளம்பூர் காவல் நிலையத்தில் குழந்தைகளின் படைப் பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையில் புத்தகங்கள், கார்ட்டூன் புத்தகங்கள் உள்ளன.  இதை டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெள்ளியன்று (ஜூன் 23) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் மனோகரன், ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நூலகத்துக்கு ஹைதராபாத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவி அகர்சனா  1000 புத்தகங்களை வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்., அகர்சனாவின் இந்த செயலை அவரது தந்தை சதீஷ் பாராட்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக குழந்தை களுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்க ளுக்கு தொடர்ந்து அவர் புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இது போன்ற புத்தகங்கள் வழங்கி பல்வேறு  தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாண வர்களின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசினார். இது  தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக் களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி ஆலோசனைகளையும் வழங்கினார்.