states

பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்குக: சிஐடியு வலியுறுத்தல்

சாத்தூர், ஆக. 16- பட்டாசு தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும், சரவெடி உற்பத்தி செய்வதற்கான தடை நீக்க வேண்டும், பட்டாசு தொழிலாளர்களுக்கு   தீபாவளி போனஸ் 50சதவீதம் உயர்த்த வேண்டும், கூலியை உயர்த்தி அறிவிக்கப் பட்ட அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும் என்று சிஐடியு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது.  சாத்தூரில் நடைபெற்ற இப்பேரவைக்கு மாவட்ட தலைவர் கே.முருகன் தலைமை வகித்தார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட தலைவர் எம். மகாலட்சுமி பேசி னார். சிஐடியு மாவட்ட செயலாளர்  பி. என்.  தேவா நிறைவுரையாற்றினார். அனைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் தேவையான அளவுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, முதலுதவி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.  புதிய பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் வழங்க வருவாய் துறை, காவல் துறை, உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, மின்சார வாரியம்  ஆகிய அரசு  அலுவலகங்களில்  லஞ்சம் கேட்பதை தடுத்து நிறுத்த வேண்டும்,  மாவட்ட வருவாய் அலுவலர் கடைகளை பார்வையிடுவதையும் பட்டாசு ஆலை உரிமம் பெறுவதையும் கால தாமதமின்றி உடனுக்குடன் வழங்குவதை உறுதி  செய்ய வேண்டும் என்று மாவட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.