ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனத்திர்க்கு எதிர்ப்பு தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய பஞப்படி உள்ளிட்ட கோடிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் மே 3 ஆம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டம்
திருப்பூர் மாவட்டம் ,திருமுருகன்பூண்டியில் சிஐடியு வின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளத்தின் உறுப்பினர் கோட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாநில தலைவர் அ.செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக வழங்கவேண்டிய பஞ்சப்படி இதுவரை வழங்கப்படவில்லை. இப்படியாக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணப் பலன்களை வழங்காமல் அரசு இழுத்தடித்துவருகிறது.
போக்குவரத்துக் கழகத்தில் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் மட்டும் 900 அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,424 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு 600 பேரை மட்டும் நிரந்தரப் பணியாளர்களாக எடுத்துவிட்டு, மீதமுள்ள 800 காலியிடங்களுக்கு தனியார் அவுட் சோர்ஸிங் மூலம் தொழிலாளர்களை நியமிக்க அரசு திட்டமிட்டு அதற்கான டெண்டரும் வெளியிட்டிருக்கிறது.
நிரந்தரத் தொழிலாளர்களை, போக்குவரத்துக் கழகத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்த பணப் பலன்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை மே 3 க்குள் நிறைவேற்றவில்லை என்றால் மே 3க்கு மேல் வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக சம்மேளனத்தின் மாநில தலைவர் அ.செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.