சென்னை, மே 30- ஆன்லைன் சர்வர் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் .நலவாரிய பணப் பயன்களை தொழிலாளர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) மாநிலப் பொதுச்செயலாளரும் கட்டுமான நல வாரிய உறுப்பினருமான டி.குமார், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: 13.05.2022 இரவு 8 மணி முதல் 22.05.2022 காலை 5 மணி வரை பரா மரிப்பு பணிகளுக்காக சர்வர் நிறுத்தி வைக்கப்பட்டு 23.05.2022-ல் மீண்டும் துவங்கிய நிலையில் தொழிலாளர்களை பதிவு செய்வதற்காக வர வழைத்து பதிவு செய்யும்போது சர்வர் வேலை செய்யாத நிலையே உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் சர்வர் இயங்க வில்லை. இதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்தி தொழிலா ளர்களின் நலன் கருதி அவர்களை அலைக்கழிப்பதை தவிர்க்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட சர்வர் வேலையை துவங்கிட வேண்டும் .
மாவட்ட நல வாரிய அலுவலகங்களில் குறைகளை தீர்ப்பதற்கென தனி அலுவலரை நியமித்து சம்பந்தப்பட்ட குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்திற்கு முன்பு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக வும் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி உதவி, இயற்கை மரணஉதவி, விபத்து மரணஉதவி உள்ளிட்ட உதவி கோரிய மனுக்கள் பல்லாயிரக்க ணக்கில் தேக்க நிலையிலேயே உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி தொழிலாளர்களுக்கு இதுபோன்ற உதவிகளை விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேல் தேக்க நிலையிலேயே உள்ளது. ஓய்வூதியர்களின் வயது மூப்பை கணக்கில் கொண்டு ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட மனுக் களை விரைந்து பரிசீலனை செய்து அரியர்சுடன் வழங்க வேண்டும். மேற்கண்ட சர்வர் பிரச்சனை, இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட உதவி கோரும் மனுக்கள் மீதும் ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக் கப்பட்ட மனுக்கள் மீதும் குறுகிய கால அவகாசத்திற்குள் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பணப் பயன்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.