states

img

ஊதிய ஒப்பந்தம் தாமதமானால் வேலைநிறுத்தம்

கோயம்புத்தூர், ஜூன் 21– ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி நடை முறைப்படுத்தப்பட வேண் டும்; தாமதமானால் வேலை நிறுத்தம் என்கிற அறைகூவ லோடு கோவையில் நடை பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன 15 ஆவது மாநில மாநாடு நிறைவுபெற்றது. சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன 15 ஆவது மாநில மாநாடு ஜூன் 19 துவங்கி 21 வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெற்றது. தோழர் எஸ்.மன்னார்சாமி நினைவரங்கத்தில் நடை பெற்ற இம்மாநாட்டிற்கு சங்  கத்தின் தலைவர் அ.சவுந்தர ராசன் தலைமை வகித்தார். மூன்றாவது நாளான செவ் வாயன்று சம்மேளன நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  இதில் சம்மேளனத்தின் மாநில தலைவராக அ.சவுந்த ரராசன், பொதுச் செயலாள ராக கே.ஆறுமுகநயினார், பொருளாளராக வி.சசிகுமார் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். துணை பொதுச்  செயலாளர்களாக வி.தயா னந்தம், டி.ஜான்சன் கென் னடி, ஏ.கனகசுந்தரம், எம்.கனகராஜ் ஆகியோரும், பன்முக மேம்பாட்டுக் குழு வில் 4 பேர் மற்றும் துணை தலைவர்களாக 12 பேர், இணைச் செயலாளர்களாக 12 பேர் உள்ளிட்ட 111 பேர்  கொண்ட நிர்வாகக் குழு மாநாட் டில் தேர்வு செய்யப்பட்டது.

முன்னதாக அரசு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளாக பணியாற்றி விடுவிக்கப்பட்ட மூத்த நிர்வா கிகள் அரங்கம் அதிரும் முழக்கங்களுக்கிடையே கௌரவிக்கப்பட்டனர். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. உடனே பேச்சு நடத்துக! மாநாட்டை நிறைவு  செய்து அ.சவுந்தரராசன் பேசு கையில், “அரசு போக்கு வரத்து தொழிலாளர்கள் 10 வேலை நிறுத்தம் செய்கிற அளவிற்கு அவர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது. ஆனால் மக்கள் நலனை கருத்  தில் கொண்டு கைகளை கட்  டிக்கொண்டு இருக்கிறார் கள். ஆனால் எத்தனை காலத்  திற்கு இப்படியே வெறுங்கை யோடு தொழிலாளிகள் வீடு திரும்ப முடியும்? எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை  அரசு உணர்ந்து கொள்ள  வேண்டும். தொழிலாளர் களின் மனநிலையை தமிழக அரசு உள்வாங்கி உடனடி யாக ஊதிய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். காலம் தாழ்த்தினால் வேலை நிறுத்தம்” என்கிற போராட்ட அறைகூவலோடு நிறைவு செய்தார். முடிவில் சிஐடியு அரசு  போக்குவரத்து ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் வேளாங்கண்ணிராஜ் நன்றி கூறினார்.