திருப்பூர், நவ.21- தமிழகத்தில் பொது விநியோகத் திட் டத்திற்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என மாநில அரசுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐ டியு) கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம் மேளன நியாய விலை கடை ஊழியர் களின் மாநில அளவிலான விரிவடைந்த கூட்டம் ஞாயிறன்று திருப்பூரில் பி.கௌத மன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண் டும். பொது விநியோகத் திட்டத்தை தமி ழக அரசு உடனடியாக தனித்துறையாக காலதாமதமின்றி அறிவிக்க வேண்டும், பெண் ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் பணி புரியும் நியாய விலை கடை களுக்கு கட்டுனர்கள் உடனடியாக நிய மித்திட வேண்டும், கட்டுப்பாடற்ற பொருட் களை விற்பனை செய்ய கட்டாயப்படுத் தக் கூடாது, மாவட்டம் வாரியாக தேங்கி யுள்ள காலிச் சாக்குகளை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், நியாயவிலைக் கடை பணி யாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உட னடியாக நிரப்ப வேண்டும் என வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இக்கூட்டத்தில் சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம், துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. மனோகரன், மாநில நிர்வாகிகள் பெரிய சாமி, பன்னீர்செல்வம், உயிர் காத்தான், கிருஷ்ணராஜா, ரங்கசாமி, ராபின்சன், சிவக்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மகேந்திரன், சுரேஷ், கருப்பு சாமி, முருகன், சரவணமூர்த்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.