கரூர், நவ.03- கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றி யம், பவித்திரம் ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டி, பள்ளமருதப்பட்டி, காருடையாம்பாளையம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் குடி யிருக்க வீடு இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங் கள் வசித்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களான இவர்கள் கட்டுமானம் மற்றும் முறை சாரா தொழில்களை செய்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வேண்டும் என சிஐடியு சங்கத்தின் க.பரமத்தி ஒன்றியக்குழு சார்பில் கோரிக்கை மனுவை கட்டு மான சங்க மாவட்ட தலைவர் ப.சரவ ணன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர், அரவக்குறிச்சி. புகளூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து வழங்கி வந்தனர். வீட்டுமனை கோரி சிஐடியு சங்க கரூர் மாவட்ட குழு, கட்டுமான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டங்கள் கரூர் மாவட்ட ஆட்சி யர், புகளூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு தொடர்ந்து பலமுறை நடத்தப்பட்டது. இந்த தொடர் போராட்டங்களின் காரணமாக நடைபெற்ற பேச்சுவார்த் தையில் அரசு அலுவலர்கள், இலவச வீட்டு மனை வழங்குவதாக உறுதி யளித்தனர். அதன் அடிப்படையில் கோரிக்கை மனு வழங்கிய பொது மக்களுக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் புகளூர் வட்டாட்சியர் சார்பில் இலவச வீட்டுமனைக்கான இடத்தை அடை யாளம் கண்டு, வீட்டு மனை எண்கள் உட்பட அனைத்தும் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கினர். ஆனால் அவர்களுக்கு அந்த வீட்டுமனைக்கான பட்டாவை வழங் காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தனர். இதனை கண்டித்தும், உடனடி யாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி புகளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 16.11.2023 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங் கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து புகளூர் வட்டாட்சியர் முருகன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக 13 நபர்களுக்கு இலவச வீட்டுமனைக்கான பட்டாக் களை புகளூர் வட்டாட்சியர் முருகன் தனது அலுவலகத்தில் வழங்கினர். மீதமுள்ள நபர்களுக்கு தகுதி யானவர்களை தேர்வு செய்து உட னடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத் தையும் வழங்கினார்.
சிஐடியு வரவேற்பு
கரூர் மாவட்ட கட்டுமானத்தொழி லாளர் சங்கம், சிஐடியு கரூர் மாவட் டக்குழு சார்பில் ஏழை, எளிய பொதுமக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி அவர்க ளோடு நின்று தொடர் போராட்டங் களை நடத்தியதின் விளைவாக, கரூர் மாவட்ட நிர்வாகமும், புகளூர் வட்டாட்சியர் நிர்வாகமும் முதல் கட்டமாக 13 நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளதை வரவேற்பதுடன், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவா னந்தம் தெரிவித்தார். பொதுமக்கள் மகிழ்ச்சி பட்டா பெற்ற பெண் ஒருவர் கூறுகையில், நாங்கள் பல தலை முறைகளாக ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசித்து வருகிறோம். தனியாக வீட்டுமனை வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. எனவே தமிழக அரசின் சார்பில் வழங்கும் இலவச வீட்டு மனையை எங்களுக் கும் வழங்கிட வேண்டும் என கட்டு மான சங்கம், சிஐடியு சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை வழங்கினோம். எங்களுக்காக சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல கட்ட போராட்டங் களை நடத்தி, தற்போது எங்களுக் காக இலவச வீட்டு மனை பட்டாவை பெற்றுத் தந்துள்ளனர். கரூர் மாவட்ட சிஐடியு சங்கத்திற்கும், கட்டுமான சங்கத்திற்கும் எங்களது நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தலைமுறை யில் எங்களுக்கு பின்னால் வரும் வாரிசுகளுக்கு செய்துள்ள மிகப் பெரிய சாதனையாக இதனை கருதுகிறோம் என்று கூறினார்.