states

ஜன.26 பட்டியலின தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்க!

சென்னை,ஜன.20- குடியரசு தின விழாவில் பட்டிய லின ஊராட்சி மன்றத் தலைவர்கள்  கொடியேற்றுவதை உறுதி செய்ய  வேண்டும் என்று அனைத்து  மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும்  தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- சுதந்திர தின விழாவில் பட்டி யலின ஊராட்சிமன்றத் தலைவர்கள்  கொடியேற்றுவதில் ஏற்படக் கூடிய  பிரச்சனைகளில் 15 இனங்கள் தொடர்பாக, அவரவர் மாவட்டத் தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை பெறப்பட்டு அரசு ஆய்வு செய்தது. அது தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எந்த வித புகார்களும் வராமல் வரும் 26 ஆம் தேதி குடிய ரசு தினவிழா இணக்கமாக நடை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கிராம சபை கூட்டங்களிலும் பட்டியலின கிராம ஊராட்சிமன்றத் தலைவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். இது குறித்து உரிய ஆதாரங்களை புகைப்படத்துடன் அரசுக்கு உடனுக்குடன் அறிக்கை அனுப்ப வேண்டும். இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.