ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி சனிக்கிழமை உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் உலக புகைப்பட தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், ‘நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்’- என கூறியுள்ளார். முன்னதாக, சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.