சென்னை,செப்.3 சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1ன் திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டு வதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல் வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி மாவட் டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்கு நராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழகத் தின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திர யான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூ பித்துக் கொண்டே இருக்கின் றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் ஷாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவரது குடும்பத்தி னர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக் கிறார்களோ அதே அள வுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்”, என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.