புதுதில்லி, மார்ச் 23- குஜராத் மத வன்முறையின் போது தன்னைக் கும்பல் வல்லு றவுக்கு உள்ளாக்கிய குற்றவாளி கள் 11 பேரின் விடுதலையை எதி ர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கு தனி அமர்வை ஏற்படுத்த உச்சநீதிமன் றம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பரிதிவாலா ஆகி யோர் அடங்கிய அமர்வு இதனை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த விசாரணையின்போது, “இது அவ சரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு. தனி அமர்வு அமைக்கப்பட வேண்டும்” என வழக்கறிஞர் ஷோபா குப்தா தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நான் ஒரு அமர்வை அமைக்கிறேன். இன்று (மார்ச் 22) மாலை இதனைப் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜ ராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப் பட்டது. அப்போது அகமதாபாத் அருகிலுள்ள தாகோடு மாவட்டம் ரன்தீக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரையும், அவரது தாயார் உள்ளிட்ட மேலும் 4 பெண்களையும் 2002 மார்ச் 3 அன்று கும்பல் ஒன்று வல்லுறவுக்கு உள்ளாக்கியது. அத்துடன் பானு வின் 3 வயது பெண்குழந்தை சலே ஹாவை பாறையில் அடித்துக் கொன்ற அந்தக் கும்பல், மொத்தமாக 7 பேரை கொன்று குவித்தது. இந்த கொடூரச் சம்பவத்திற் குப்பின், பில்கிஸ் பானு நடத்திய நீண்ட நெடிய சட்டப்போராட்டம் கார ணமாக, 2008-ஆம் ஆண்டு, குற்ற வாளிகள் 11 பேருக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளி கள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, ஜஸ்வந்த்பாய் நாய், கோவிந்த்பாய் நாய், ஷை லேஷ் பட், ராதேஷாம் ஷா, பிபின் சந் திர ஜோஷி, கேசர்பாய் வோஹா னியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹா னியா, ராஜூபாய் சோனி, மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகிய குற்றவாளிகள் 11 பேரையும், 2022 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு குஜராத் பாஜக அரசு சிறையில் இருந்து விடு தலை செய்தது.
1992-ஆம் ஆண்டின் குஜராத் மாநில சிறைக்கைதிகள் தண்ட னைக் குறைப்பு கொள்கை அடிப்ப டையில், 11 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுப்ப தற்கு குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று 2022 மே மாதம் நீதி பதி அஜய் ரஸ்தோகி தலைமையி லான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே குற்றவாளி களை விடுவித்ததாக மாநில பாஜக அரசு கூறிக்கொண்டது. ஆனால், இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன் னடத்தை விதி பொருந்தாது என்று பலரும் கூறினர். மேலும், குற்றவாளிகளில் ஒரு வர் 2020-இல் பரோலில் வெளியே வந்தபோது ஒரு பெண்ணை பாலி யல் துன்புறுத்தல் செய்ததாக அர சின் பிரமாணப் பத்திரமே குறிப்பிடு வதால், நன்னடத்தை எங்கே இருக்கி றது? என்றும் கேள்வி எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் சுபா ஷினி அலி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பத்திரி கையாளர் ரேவதி லால், முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் மீரான் சாதா போர்வான்கர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவும் குற்றவாளி களின் விடுதலைக்கு எதிராக கடந்த நவம்பர் 30 அன்று உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார். அத் துடன், குற்றவாளிகளை விடுவிப்ப தற்கு குஜராத் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு 2022 மே 13 அன்று அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். இதில், அஜய் ரஸ்தோகி தலை மையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய் யக்கோரும் மனுவை, 2022 டிசம்பர் 17 அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறு ஆய்வு மனுவையும், நீதிபதி அஜய் ரஸ்தோகி, நீதிபதி பேலா எம். திரிவேதி, விக்ரம் நாத் அமர்வே விசாரிப்பதாக இருந்த நிலையில், நீதிபதி பேலா எம். திரி வேதி, ஒருவாரத்திற்கு முன்னர் வழக்கிலிருந்து விலகிக் கொண் டார். இதனால், “உச்ச நீதிமன்றம் முன்னர் அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதாக தெரியவில்லை; எனவே, இவ்வழக்கை விசாரிப்ப தற்கு முகாந்திரம் இல்லை” என்று நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் அமர்வு தீர்ப்பளித்தது. அதேநேரம், 11 பேரின் விடுத லைக்கு எதிரான பில்கிஸ் பானுவின் மனு பரிசீலனையில் இருந்து வந் தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க தனி அமர்வு ஏற்படுத்தப் படும் என்று உச்ச நீதிமன்றத் தலை மை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரி வித்துள்ளார்.