சென்னை, ஜூன் 4- சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் சனிக்கிழமை (ஜூன் 4) பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி.சந்திர சேகரன், வி.சிவஞானம், ஜி.இளங் கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண் ணம்மாள், எஸ்.சத்திகுமார், கே.முர ளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து குடியரசு தலைவர் அண்மையில் இதற்கான உத்த ரவை பிறப்பித்தார். நிரந்தர நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள 9 பேரில் 8 பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி பிரமா ணம் செய்து வைத்தார். நீதிபதி சத்திகுமார் வேறு ஒரு நாளில் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி கூடுதல் நீதிபதிகளாக இவர்கள் 9 பேரும் பதவியேற்றனர். நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ள இவர்கள் 9 பேரும் மாவட்ட நீதிபதியாக இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள். இதில் நீதிபதிகள் முரளிசங்கர், தமிழ் செல்வி ஆகியோர் கணவன், மனைவி என்பதும், மேலும் சனிக் கிழமை பதவியேற்றுள்ள நீதிபதிகள் எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள் இருவரும் அடுத்த மாதம் பணி ஓய்வுபெற உள்ளது குறிப்பிட தக்கது.