states

கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன் மீதான குற்றப்பத்திரிகை ரத்து

சென்னை, ஜூன் 28- வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய கே. பால கிருஷ்ணன், முத்தரசன், திருமா வளவன் ஆகியோர் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக  சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தர சன்,  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்  திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து இவர்கள் மீது  சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள  எம்பி, எம்எல்ஏக்கள் சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜூலை 9ம் தேதி அனைவரும் ஆஜ ராக வேண்டும் என்றும் இல்லை யென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் படும் என்று நீதிமன்றம் எச்சரித் திருந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று பேர் சார்பிலும், குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதி சதீஷ்குமார் முன் செவ்வா யன்று (ஜூன் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில்  ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, ஜனநாயக ரீதியிலான போராட்டம்தான் என்றும், அப்போது எந்த ஒரு சட்டம்  ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார் மூன்று பேர் மீதான குற்றப் பத்திரிகையை ரத்து செய்து உத்தர விட்டார்.