states

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் மாற்றம்

சென்னை, செப். 28- தமிழ்நாட்டின் வரைவு வாக்கா ளர் பட்டியல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரி வித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் வாக்கா ளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு  வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும். இந்த ஆண்டுக்கான வாக்கா ளர் பட்டியல் திருத்தப்பணிகள் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி  தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அன்றே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:- தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியாக அறிவிக்கப்பட்ட வரும்  அக்டோபர் 17 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27 ஆம் தேதி வெளியிடப்படும். இதற்கான அட்டவணை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்கா ளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினம் வாக்காளர் பட்டி யல் திருத்த பணிகள் தொடங்கும். அதன்படி, அக்டோபர் 27 ஆம்  தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி  வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி  மாற்றம் போன்ற திருத்தங்களுக் கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த காலகட்டத்தில் பெறப் பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர்  26 ஆம் தேதி வரை பரிசீலிக்கப் படும். அதன் அடிப்படையில் இறுதி  வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் பட்டு ஜனவரி 5ஆம் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்த  காலகட்டத்தில் ஆதார் இணைப் புக்கான விண்ணப்பம் அளிக்க லாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்துகின்றனர். ஆனால் நகர்ப் புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.