states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘சந்திராயன் 3 விண்கலம் ஜூலையில் ஏவப்படும்’

“சந்திராயன் 3-ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி யுள்ளது. விண்கலத்தை ஏவும் மார்க்-3 ராக்கெட்டும் தயார் நிலையில் உள்ளது. சந்திராயன்  விண்கலமும், பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கை கோள் மையத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. எனவே, சந்திராயன் 3 விண்கலம், ஜூலை 12 முதல் 19-க்குள் விண்ணில் ஏவப்படும்” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி ஜூன் 21-இல் அமெரிக்கா சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கி றார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோ ரின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி, இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். அமெரிக்க  பயணத்தின் போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுவதுடன், அமெரிக்கா வின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார். மேலும், இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்திலும் உரை யாற்றுகிறார்.

ஒன்றிய அரசு அலுவலகங்களில் இனி யோகா இடைவேளை!

அரசு ஊழியர்கள், அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்தபடியே யோகா செய்வதற்கான  புதிய முறையை பழக்கிக் கொள்ளுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக  யோகா இடைவேளையை அறிமுகப்படுத்தியுள்ள ஒன்றிய அரசு, இதுதொடர்பாக அனைத்து  அமைச்சரக மற்றும் துறை ரீதியான அதிகாரிகளுக்கு பரிந்துரையை அனுப்பியுள்ளது.  அலுவலகப் பணிக்கு இடையே சற்று இடைவெளி எடுத்து நாற்காலியில் அமர்ந்துகொண்டே யோகா செய்து மன அழுத்தத்தைக் குறைத்து, புத்துணர்ச்சி பெறலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது: தம்பிதுரை

“தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பை பாஜக மட்டுமே ஏற்படுத் தும் என பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. எம்.ஜி.ஆர். அதற்காகத்தான் அ.இ.அ.தி.மு.க. என்ற  கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் தற்போது எடப்பாடி பழனிசாமி யை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர்  தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தது போல இந்தியாவையும் திறமையுடன் ஆட்சி செய்வார். இந்தி யாவில் பிரதமராக பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், தமிழர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை எம்.பி. பேசியுள்ளார்.

3.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கி விட்டதாம் மோடி அரசு

2014 மக்களவைத் தேர்தலின் போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, பணமதிப்பு  நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக  இருந்த வேலைவாய்ப்புக்களையும் ஒழித்துக் கட்டினார். தற்போது மக்களவைத் தேர்தலை யொட்டி, 2025-க்குள் அரசுத் துறைகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு வேலை என்று புதிய மாய்மாலங்களில் இறங்கியுள்ளார். ‘ரோஜ்கர் மேளா’ என்ற திட்டத்தை அறிவித்து, கடந்த மே 16 அன்று சுமார் 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்கிய அவர், ஜூன் 13 அன்றும் 70  ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கி யுள்ளார். ‘ரோஜ்கர் மேளா’வில் இதுவரை 3 லட்சத்து 58 ஆயிரம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கணக்கு கூறியுள்ளார்.

ஜூன் 23 கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெகபூபா பங்கேற்பு

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவது தொடர்பான அனைத்து எதிர்க்கட்சி களின் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 23 அன்று நடைபெற உள்ளது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித்  தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் பங்கேற்க இருப்பதாக, ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

‘வாட்ஸ் ஆப்’-பில் அவுரங்கசீப் படம் வைத்த இளைஞன் கைது!

மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை பகுதியில் வசிக்கும் நபர், செல்போன் சர்வீஸ் செய்யும்  கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது ‘வாட்ஸ் ஆப்’ கணக்கின் முகப்பில் முகலாய  பேரரசர் அவுரங்கசீப்பின் படத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்துத்துவா அமைப்புக்கள் வாசி பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசா ரும் அந்தப் புகாரை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது ஐபிசி 298 (மத உணர்வுகளை  புண்படுத்தியது), 153-ஏ (இரு பிரிவினர் இடையே பகைமையை தூண்டியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

மோடியை விமர்சித்த வழக்கு: ராகுல் ஆஜராக ஆக.2 வரை விலக்கு

“கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பேசிய அவர், பிரதமர் மோடியை ‘கொள்ளைக் கூட்டத்தின் தலைவர்’ என்று சாடினார். இதற்காக, ராகுல் காந்தி மீது மகேஷ் ஸ்ரீஸ்ரீமல் என்ற பாஜக ஆதரவாளர் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராகுல் நேரில் ஆஜராவதற்கு நீதிமன்றம் ஏற்கெனவே விலக்கு அளித்திருந்தது. தற்போது அதனை ஆகஸ்ட் 2 வரை நீட்டித்து நீதிபதி கோட்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

“மகாராஷ்டிரத்தில் மூடநம்பிக்கைக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டுவந்த மருத்துவரும் எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் புனேயில் கடந்த 2013 ஆகஸ்ட் 20 அன்று சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற நிலை உங்களுக்கும் ஏற்படும்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, புனே-யில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரவு பகுப்பாய்வாளராக பணிபுரியும் சாகர் பார்வே என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

அசாமில் சாலையோரத்தில் இறந்து கிடந்த பாஜக பெண் பிரமுகர்!

அசாம் மாநிலத்தில், ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், இங்கு பாஜகவின் கோல்பாரா மாவட்டச் செயலாளராக இருந்த ஜோனாலி நாத் என்ற பெண், சல்பாரா பகுதியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மர்மமான  முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்தும் விசாரித்து வருகின்றனர்.

தலைமைச் செயலக அறையிலும் சோதனை

சென்னை, ஜூன் 13- மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் செவ்வாயன்று (ஜூன் 13) காலை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அடையாறு பசுமை வழிச் சாலையிலுள்ள வீடு, பிஷப் கார்டன் பகுதியிலுள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.  இந்த நிலையில் தலைமை செயல கத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் சோதனை மேற் கொண்டு வருகின்றனர்.

பேருந்துகள் கொள்முதல்: ஒப்பந்த புள்ளி வெளியீடு

சென்னை,ஜூன் 13- தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பேருந்துகள் இயங்கி வரும் நிலையில், 10 ஆயிரம் பேருந்துகள் 15 ஆண்டு களை கடந்து விட்டன. ஒன்றிய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பேருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை பழைய பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சட்டப்பேரவையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பேருந் துகள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பேருந்து களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. இதில் 150 பேருந்துகள் முழுமை யான தாழ்தள பேருந்துகளாக வாங்கப்படுகிறது. புகழ்பெற்ற பேருந்து பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற் கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்கு வதற்காக புதிய பேருந்துகளை வாங் கும் பணி விரைந்து செயல்படுத் தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.