states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. பழனி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலை வராக சென்னையைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் நியமனம் செய் யப்பட்டுள்ளார். திருப்பூ ரைச் சேர்ந்த சுப்பிரமணி, திண்டுக்கல் மணிமாறன், ராஜசேகரன், ஒட்டன் சத்திரம் சத்யா உறுப்பினர் களாக நியமனம்.
  2. உலக சுகாதாரக் கழகத்தின் புள்ளிவிபரப்படி உலகம் முழுவதும் 18 ஆயிரம் பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. 78 நாடுகளில் இந்த பாதிப்பு உள்ளதாகவும், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிக பாதிப்பு இருக்கிறது என்றும் உலக சுகாதாரக் கழகம் தெரிவித்துள்ளது. குரங்கம்மை பாதிப்பை அவசர நிலையாகக் கருத வேண்டும் என்று  ஜூலை 23 ஆம் தேதியன்று அறிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. அமெரிக்காவின் தொழில் முனைவோர்களில் ஒருவரான ஆண்ட்ரூ யாங் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட அவர் முயற்சித்தார். தற்போது புதிய கட்சியைத் தொடங்கி, இரு கட்சிகளுக்கிடையே மட்டும் போட்டி என்ற நிலையை மாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், 2024 ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலான மாகாணங்களின் வாக்குப் பெட்டிகளில் தனது கட்சி இடம் பிடிக்கும் என்கிறார்.
  4. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் அப்பாவி பாலஸ்தீன மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளுவதில் இஸ்ரேல் காட்டும் மும்முரம் தொடர்கிறது. ஜெரிச்சோ நகரில் உள்ள ஆறு வீடுகளை இஸ்ரேலிய நிர்வாகத்தினர் தரைமட்டமாக்கியுள்ளனர். இதற்காக ராணுவத்தை அந்தப் பகுதியில் நிறுத்தி, ராணுவத்திற்குச் சொந்தமான புல்டோசர்களை வைத்து அந்த வீடுகள் இடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஜெனின் நகரிலும் இடிப்பு வேலைகள் நடந்திருக்கின்றன.