states

சண்டிகர் மாநகராட்சி தேர்தல் : ஆம் ஆத்மி வெற்றி

சண்டிகர், டிச. 27 - பாஜக வசம் உள்ள சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் திங்களன்று காலை முதல் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 35 வார்டுகளில் ஆம் ஆத்மி  14 வார்டுகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ளது. ஆளும் பாஜகவுக்கு 12 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும், சிரோமணி அகாலிதளம் 1 இடத்திலும் வென்றுள்ளன. சண்டிகர் மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு மொத்தம் 19 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சியும் பெரும்பான்மை இடத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.