சென்னை, செப்.6- தமிழ்நாட்டில் 6 நாட்க ளுக்கு பரவலாக மழையும் என்றும் கோவை, நீலகிரி, தேனி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.7 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்.8 ஆம் தேதி முதல் செப்.10 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்க ளில் ஒருசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள் ளது. செப்.11 மற்றும் செப்.12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.