நாளையும் மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூன் 27- தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 29,30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஜூன் 28ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண் ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. 29ஆம் தேதி குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கட லோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிக ளில் லட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
சென்னை, ஜூன் 27- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்களுக்கான பொருட்கள் தனித்தனியே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சைக்கிளாக பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் 4 நாட்களில் நிறைவடைந்து விடும் என்பதால் அடுத்த மாதம் விலையில்லா சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுவது போல் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவை முன்னாள் தலைவருக்கு கொரோனா தொற்று
சென்னை, ஜூன் 27- தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் சட்டப் பேரவை முன்னாள் தலைவர் தனபாலுக்கு ஆகியோருக்கு திங்களன்று (ஜூன் 27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் ஈபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைகளில் கடம்பூர் ராஜூ பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.