states

சென்னையில் மேலும் இரு நாட்கள் அனல் காற்று வீசும்: வானிலை மையம்

சென்னை,மே 17- சென்னை மாவட்ட மக்களை வர லாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுக்கிறது. கடந்த 4ஆம் தேதி அக்னி வெயில் தொடங்கி யது. தொடங்கிய ஒன்றிரண்டு நாட்களி லேயே தனது கோர முகத்தை காட்ட தொடங்கியது. அக்னியின் உக்கிர பார்வையில் இருந்து யாராலும் தப்பிக்க  முடியவில்லை. சாலைகளில் மக்கள் நட மாட்டம் குறைந்துவிட்டது. அவசரத் தேவைகளுக்காக வெளியே செல்ப வர்களும் வியர்வை மழையில் குளித்த படியே செல்கிறார்கள்.  சென்னையில் செவ்வாய்கிழமை 109 டிகிரி வெயில் கொளுத்தியது. பூந்த மல்லியில் 111 டிகிரியை தாண்டியது.  புதன்கிழமையும் காலையில் இருந்தே வெயில் கடுமையாக சுட்டெரித்தது. முதி யோர், குழந்தைகள் வெளியே செல்  வதை தவிர்க்கவேண்டும் என்று மருத்து வர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வெயில் பாதிப்பில் இருந்து தப்பிக்க அடிக்கடி போதிய அளவு தண்ணீர் அருந்துவதோடு பழச்சாறு,மோர் போன்றவற்றை அருந்தலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். புதுச்சேரியை பொறுத்தவரை  கூடுதலாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் வியாழக்கிழமை (மே 18)  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102.6 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உண்டு. வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து வறண்ட காற்றே வீசுகிறது. கடல்காற்று உள்ளே வர தாமதமாவதால் வெப்பம் தணிய கால தாமதமாகிறது. இந்த நிலையே மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்றார். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்  டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.