புதுதில்லி, அக்.29- இந்தியத் தொழிலாளர் மாநாட்டை நடத் திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து, ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்விற்கு, மத்தி யத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை வெள்ளியன்று கடிதம் அனுப்பியுள்ளது. சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்சித் கவுர், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டாகக் கையொப்பமிட்டு, ஒன்றியத் தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவிற்கு ஒரு கடிதம் அனுப்பி யுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியத் தொழிலாளர் மாநாட்டை நடத்திட வேண்டும்.
அரசு, முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் உயர்ந்தபட்ச அமைப்பாக விளங்கும் இந்தியத் தொழிலா ளர் மாநாட்டின் 46ஆவது அமர்வு கடைசியாக 2015 ஜூலை 20-21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பின் அடுத்த அமர்வு இதுவரை நடைபெற வில்லை. ஒவ்வோராண்டும் இந்த மாநாட்டை நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசாங் கத்திற்கு இருந்துவந்தபோதிலும் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மாநாட்டை ஒன்றிய அர சாங்கம் நடத்த முன்வரவில்லை. எனவே இந்த மாநாட்டை விரைந்து நடத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்திய தொழிலாளர் மாநாட்டின் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிப்பதற் காக, அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நிலையான தொழிலாளர் குழு (Standing Labour Committee) கூட்டத்தை உடனடியாக நடத்திட வேண்டும். 42,43,44 மற்றும் 45ஆவது இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்த ஊழியர்க்கும் நிரந்தர ஊழியர்க்கான ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, மதிய உணவு, ‘ஆஷா’ தொழிலாளர்களை முறைப்படுத்தி, குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக 42, 43, 44, 45ஆவது இந்தியத் தொழிலாளர் மாநாடுகள் ஒருமனதாக நிறைவேற்றிய பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்
லேபர் கோடுகளைக் கிழித்தெறிக!
தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டிவிட்டு அதற்குப் பதிலாக லேபர் கோடு (Labour Code)கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள, தொழிலாளர்களின் உரிமை களைப் பறித்திடும், தொழிலாளர் விரோதச் சட்டங்களைக் கிழித்தெறிய வேண்டும். 2021 அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மக்க ளவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் வாக்குறுதி அளித்தபடி 2021ஆம் ஆண்டு அத்தியாவசியப் பாதுகாப்புப் பணிகள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மத்தியத் தொழிற்சங்கங்களுடன் முறை யாக நடத்தப்படும் காலமுறைக் கூட்டங்கள் சமீபகாலங்களில் நடத்தப்படவில்லை. அவற்றை உடனடியாக நடத்த வேண்டும். தொழிற்சங்கங்களுடன் கலந்துபேசி குறைந்த பட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். முறைசாராத் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஒன்றிய அரசு ஊழியர்களுக் கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டுவர வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்குத் தாரை வார்ப்பதையும், பணமாக் கும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் மத்தியத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)