சென்னை,மார்ச் 1- சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஒலிபெருக்கி அறிவிப்பை தொடர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.வில் சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடித விபரம் வருமாறு: மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016, நாட்டிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் மாற்றுத் திறனாளிகளும் அணுகத்தக்க வகை யில் மாற்றி அமைத்திட ரயில்வே துறையை கட்டாயப்படுத்துகிறது. இவற்றில் ஆடியோ மற்றும் வீடியோ அறிவிப்புகளும் அடங்கும். ஆனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தை அமைதி ஆக்குகிறோம் என்ற பெயரில் ஒலி அறிவிப்பு முறையை நிறுத்தம் செய்து தெற்கு ரயில்வே நடை முறைக்குகொண்டு வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாமர மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். இது ரயில் நிலை யத்தை ‘அமைதியாக’ ஆக்காமல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுவான பயணிகளின் உரிமை களை நிச்சயமாக மவுனமாக்குகிறது. இது ஒரு ‘பரிசோதனை அடிப்படையி லான நடவடிக்கை’ என்றாலும், தெற்கு ரயில்வேயின் இந்த முக்கிய முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்கம் உட்பட, பயணிகள் தொடர்பான எந்த அமைப்புகளுடனும் எந்த ஆலோசனை யும் நடத்தவில்லை. ரயில் நிலையத்தின் பல இடங்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி வரைபடங்கள் மற்றும் டிஜிட்டல் குறியீடுகளை வழங் குவது வரவேற்கத்தக்கது. ஆனால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பாமர பயணிகளிடம் ஸ்மார்ட் போன்கள் இல்லை. எனவே மற்ற பயணிகளின் தயவில் தகவல்களை அறிய தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் சுய கவுர வத்தை, தன்னம்பிக்கையை இழக்கும் படி தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் விரோத, பிற்போக்குத்தனமான இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று, நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையத்தில் ஒலி அறிவிப்பு முறையை மீண்டும் தொடங்க உத்தர விட வேண்டும். இல்லையெனில் ரயில்வேயின் இந்த நடவடிக்கையை கண்டித்து, இந்த நடைமுறையை திரும்பப் பெறும் வரை போராட்டங் களை நடத்துவோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.