தூத்துக்குடி.ஏப். 1 தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசைகளில் வசிப்போர் குறித்து ஏப்.4 முதல் 25 வரை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (ஊரகம்) மற்றும் மாநில அரசின் இதர திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. ‘குடிசை இல்லா தமிழகம்” என்பதை இலக்காகக் கொண்டு 2010ம் ஆண்டு நடந்த ‘கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கணக்கெடுப்பை” அடிப்படையாகக் கொண்டு ‘ஜனவரி 2022ம்” மாதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், தற்போது ‘வீட்டுவரி கேட்பு பதிவேட்டின்” அடிப்ப டையில் 2010ம் ஆண்டிற்குப் பிறகு 28.02.2022 வரை பதி வேட்டில் இடம்பெற்றுள்ள குடிசைகளில் வசிப்போரிடம் 04.04. 2022 முதல் 25.04.2022 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட வுள்ளது. கணக்கெடுக்கும் அலுவலர்களாக கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு உறுப்பினர் அல்லது முழுசுகாதாரத் திட்ட ஊக்குநர் ஆகியோர் இடம் பெறுவர். கணக்கெடுப்பு குழுவினரிடம் பட்டா, குடிமைப்பொருள் வழங்கல் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கேட்கும்போது காண்பித்து கணக்கெடுப் பினை செவ்வனே நடத்திட பொதுமக்கள் ஒத்தழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.