புதுச்சேரி, ஜூன் 4- அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகப் பாடத்திட்டத் துக்கு பதிலாக புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் 6-ம் வகுப்பு முதல் தொடங்க வழிகாட்டு நெறிமுறை களை அமல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2011-ல் என்ஆர்காங், அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15-ம் கல்வி ஆண்டு தொடக் கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப் பாக சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பிற்கும் சிபி எஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத் தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ, பாடத் திட்டம் விரிவாக் கப்படவில்லை. இதனால், 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் படித்து வந்த மாணவர்கள் வேறு வழியின்றி 6-ம் வகுப்பில் இருந்து தமிழக பாடத் திட்டத்தை படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய அரசு, 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி முறையான தேசிய கல்விக் கொள்கையை அமல் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியிலும் புதியக் கல்விக் கொள்கை அமலாகவுள்ளது. இதற்கு ஏற்ப மத்திய அரசின் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்திட புதுவை அரசு முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டில் இது சாத்தியமில்லை. அடுத்த கல்வி யாண்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கைகளை விரைவு படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.