states

img

திரிணாமுல் எம்எல்ஏ வீட்டில் சிபிஐ சோதனை

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும்  மாநிலங்களில் உள்ள முக்கியத் தலைவர்கள், அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத் துறை, சிபிஐ உள் ளிட்ட மத்திய அமைப்புகள் சோதனை நடத்தி வருகின்றன. இந்நிலை யில், ஆசிரியர் நியமன ஊழல் வழக்குத்  தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ்  ஆளும் மேற்குவங்க மாநி லத்தின் டோம்கல் தொகுதியின் ஆளுங்  கட்சி எம்எல்ஏ ஜபிகுல் இஸ்லாமின் வீடு  மற்றும் கொல்கத்தா நகராட்சி கவுன்சிலர்  பப்பதித்யா தாஸ்குப்தா, பிதான்நகர் நக ராட்சி கவுன்சிலர் தேவ்ராஜ் சக்கரவர்த்தி ஆகியோரின் வீடுகளில் வியாழனன்று சிபிஐ சோதனை நடத்தியது. மொத்தம் 7 நகரங்களில் நடைபெற்ற இந்த சோத னையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சிபிஐ எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.