சேலம் ஆத்தூர் பழங்குடியின மக்களுக்கு கால் நூற்றாண்டுக்கு பிறகு சாதிச்சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு மற்றும் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி ஏ.வி.சண்முகம், சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், செந்தில்குமார் ஆகியோர், சாதிச் சான்றிதழ் பெற்ற மாணவிகளுடன் வருவாய்க் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஆத்தூர் மட்டுமின்றி அனைத்து பழங்குடியின மக்களுக்கும் உடனடியாக சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என பி.டில்லிபாபு தெரிவித்தார்.