திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட தாசில் தார்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப் புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள னர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்த ரமேஷ் (தற்போது ஜமுனாமரத்தூர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார்) நிலுவைத் தொகை போன்ற இனங்களில் போலியாக பட்டியல் தயார் செய்து வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு பல லட்சம் ரூபாய் பற்று வைக்கப்பட்டுள்ள தாக புகார்கள் வந்தன. அதன்பேரில் ஆதி திராவிடர் நல ஆணையரின் நேர்முக உதவி யாளர் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செங்கம் மற்றும் போளூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை செங்கம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார்களாக பணிபுரிந்த ரமேஷ், சுப்பிர மணியன், உதவி கருவூல அலுவலர் சர வணன் உள்பட ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், விடுதிகளில் பணிபுரிந்தவர்கள் என மொத்தம் 17 பேர் முறைகேடுகளில் ஈடு பட்டு பல லட்சம் ரூபாய் அரசு பணத்தை போலி பட்டியல்கள் மூலம் கையாடல் செய்து,கூட்டுச்சதியில் ஈடுபட்டது தெரிய வந்தது ஆய்வுக்குழு அறிக்கையின்படி தனி தாசில்தாராக பணிபுரிந்த ரமேஷ, உடந்தை யாக இருந்த இளநிலை வருவாய் ஆய்வா ளர் மணிகண்டன் ஆகியோர் மீது துறை ரீதி யான ஒழுங்கு நடவடிக்கையும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின ரால் குற்றவியல் வழக்கு தொடரவும் நட வடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்புத்துறை இயக்ககம் உத்தரவின் படி செங்கம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் கடந்த 2018 முதல் 2021-ம் ஆண்டு வரை பணிபுரிந்த தனிதாசில்தார்கள் ரமேஷ், சுப்பிர மணியன் உள்பட 17 பேர் மீது திருவண்ணா மலை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வா ளர் மைதிலி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.