தமிழகம் முழுவதும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா மற்றும் போதைப் பொருட் கள் விற்பனையை தடை செய்ய வேண்டும்; கஞ்சா விற்பனை செய்வோர் சொத்துக்களை பறிமுதல் செய்து, வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அண்மையில் உத்தரவு பிறப்பித்தார். சென்னைக்கு ஆந்திராவில் இருந்து ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ஆந்திரா வழியாக வரும் ரயில்களில் சோதனை நடத்தி கஞ்சா உட்பட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இதில் பகுதி வாரியாக கஞ்சா வாங்கி விற்பவர்கள் மட்டுமே சிக்குகின்றனர். மொத்த வியாபாரி கள் சிக்குவதில்லை.
தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா புகைப்பொருட்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் தங்களின் உபயோகத்துக்காக கஞ்சா வாங்கி வந்து, தன் தேவைக்குப் போக மீதியுள்ள கஞ்சாவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிலையும் தொடர்கிறது. கஞ்சா விற்பனையைத் தடுக்கும் விதமாக ஏற்கெனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி ருந்தாலும், கடந்த சில மாதங்களாக இப்பணி யில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகி றது. பலர் காவல் துறையில் ஆதாரங்களோடு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் காவல் துறை மெத்தனமாக செயல்படுகிறது என்ற புகாரும் பொதுமக்கள் மத்தியிலிருந்து எழுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் கால மாக கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாக காவல் துறை வட்டாரங்களே தெரிவிக்கின் றன. தற்போதைய காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கஞ்சா புழக்கத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், அவர் தெரிவித்துள்ள ஊடக செய்தியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் கஞ்சா விற்பனை தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித் துள்ளார். அதேபோல, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். ஆனாலும், இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கூறுகின்றனர். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2021 மற்றும் 2022-ல் 195-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும், 296 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும், 2503 கிலோ கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்த இரண்டு மாவட்ட காவல் உயர் அதிகாரிகளை கேட்கும்போது விபரம் தெரிய வருகிறது. தஞ்சை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இதே அளவு வழக்குகளும், கைது நடவடிக்கை களும் கஞ்சா பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதும் இருக்கலாம் என்று யூகித்துக் கொள்ள முடிகின்றது.
அண்மைக் காலமாக இளைஞர்கள் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் போக்கு பரவலாக அதிகரித்து வருவது கண்கூடாக தெரிய வருகிறது. மாணவர்கள், இளை ஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் இப்போக்கை அனுமதிக்கக்கூடாது. கல்வி நிலையங்களுக்கு அருகில்கூட போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்கப்படு கின்றன. காவல்துறைக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அரசியல் தலையீடு, பெயரளவுக்கான வழக்குப்பதிவு உள்ளிட்ட காரணங்களால் கஞ்சா விற்பனை யாளர்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் பரவலாக பரவி வருகிற கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்திட காவல் துறையின் நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்திட வேண்டும். குறிப்பாக எங்கிருந்து கஞ்சா வருகிறது? இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பன குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை விடுமுறைக்குப் பின்னர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள் உள்ள பகுதியில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அதேநேரத்தில், இதுகுறித்த விழிப்புணர்வையும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேலான கஞ்சா வுடன் ஒருவர் கைது செய்யப் படும்போது தான், ஜாமீனில் வெளிவர முடியாத தண்டனை அளிக்கப்படுகிறது. மாறாக, குறைந்த அளவு கஞ்சாவுடன் கைது செய்யப் படுவோர் எளிதாக ஜாமீனில் வெளியே வந்து விடுகின்றனர். அதன்பிறகு, அவர்கள் பயமின்றி மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால், பல நேரங்களில் போலீசாரின் கைது நடவடிக்கை பலன ளிக்காமல் போய்விடுகிறது. எனவே, கஞ்சா விற்பனை செய்வோர் மீது பாரபட்சமின்றி கடு மையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரவுடிகளை கட்டுப்படுத்தவும், போதைப் பொருட்கள் விற்பனையை கண்காணித்து தடுக்கவும் காவல் துறையில் தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டால் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும். இதில் அரசு உரியவாறு கவனம் செலுத்திட வேண்டும். அப்போதுதான் கஞ்சா புழக்கத்தை தடுத்து நிறுத்தி இளைஞர் மாண வர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட முடியும்.