states

பயணி தாக்கியதில் பேருந்து நடத்துநர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை, மே 14- பணியிலிருக்கும்போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண  உதவி வழங்க தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோயம்பேட் டிலிருந்து சனிக்கிழமை (மே14) அதிகாலை விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது,  மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் முருகன் என்பவர் பேருந்தில் ஏறி யுள்ளார். அப்போது நடத்து னர் பெருமாள் பிள்ளை அந்த  நபரிடம் டிக்கெட் எடுக்க வலி யுறுத்தியுள்ளார். அப்போது, மது போதையில் இருந்த  அந்த நபர் டிக்கெட் எடுக்க  முடியாது என தெரிவித்து,  நடத்துனரை தாக்கியுள்ளார். இதனால் நடத்துனர் மயங்கி கீழே விழுந்தார். இதனை அறிந்த பயணி முருகன் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் பகுதியில் பேருந் தில் இருந்து குதித்து தப்பி  ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து சக பயணிகள் மயக்கமடைந்த நடத்துனர் பெருமாள் பிள்ளையை மேல்மருவத்தூர் மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த  மதுராந்தகம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி, சூனாம் பேடு பகுதியை சேர்ந்த முருகனை கைது செய்தனர். இந்நிலையில் உயிரிழந்த  நடத்துனர் பெருமாள் பிள்ளை குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துனரின் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கவும் அவர் உத்தர விட்டுள்ளார்.