மாஸ்கோ, அக். 21 - ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் பிளஸ் பொருளாதார கூட்ட மைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 22 முதல் 24 வரை நடைபெற உள்ளது. ‘சமமான உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பிற்கான பன்முகத்தன்மை யை’ பலப்படுத்துதல்’ ஆகிய முழக்கங்களை முன்வைத்து இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதி பதி ஜி ஜின்பிங், துருக்கி ஜனாதி பதி எர்டோகன், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலை வர்களும் 32 நாடுகளின் பிரதி நிதிகளும் பங்கேற்க உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரி வித்துள்ளது. துருக்கி, புர்கினோ பாசோ உள்ளிட்ட பல நாடுகள் பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பில் உறுப்பின ராக இணைய விண்ணப்பித்துள்ள நிலையில் இம்முறை எத்தனை நாடு கள் உறுப்பினர்களாக இணைய உள்ளனர் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இந்த கூட்டமைப்பின் மிக முக்கிய அறிவிப்பாக சர்வதேச வணிகத்தில் டாலருக்கு மாற்றான பரிவர்த்தனை நாணயங்கள், ஆன்லைன் பரிவர்த்தனை முறையும் இந்த ஆண்டு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அது அமெரிக்காவின் டாலர் சாம்ராஜ்யத்தையும் ஆதிக்கத்தை யும் தகர்ப்பதற்கான முக்கிய நட வடிக்கையாக அமையும் என கூறப்படுகிறது. இம்மாநாட்டிற்கு இடையே ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கி யான் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களுடன் ரஷ்யா ஜனாதிபதி புடின் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தலைமையில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. அப்போது, பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப் பில் ஈரான், எகிப்து, எத்தி யோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ உறு ப்பினர்களாக இணைக்கப்பட்டன. அமெரிக்காவின் அடிவருடி யான அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலெய் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக இணைய மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.