விருதுநகர், ஏப்.1- விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத் தைச் சேர்ந்தவர் ஆக்கண்ணா(42). இவர் பட் டாசு கடை நடத்தி வருகிறார். இவரது தங்கை அனுசியாதேவி. சிறிய கடை வைத்து வியாபா ரம் செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல கடையை இரவு பூட்டி விட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே இருந்த ரூ.2 ஆயிரம் திருடு போனதாக கூறப்படு கிறது. மேலும், அருகில் உள்ள பல கடைகளி லும் இதேபோல் பூட்டு உடைக்கப்பட்டு திருடும் முயற்சி நடைபெற்றுள்ளது. எனவே, உரிய நட வடிக்கை கோரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஆக்கண்ணா புகார் செய்தார்.