தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலைச் சிற்றுண்டித் திட்டம் குறித்து வன்மத்துடனும், வக்கிரத்துடனும் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தினமலர் நாளிதழைக் தீயிட்டுக் கொளுத்தியும், பல இடங்களில் டிஜிட்டல் போர்டுகளில் தினமலர் என்ற பெயரை தார் ஊற்றி அழித்தும் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். சென்னையில், ஆயிரம் விளக்கு, வள்ளுவர் கோட்டம் பகுதிகளில் சாலையோர பூங்காங்களில் அமைக்கப்பட்டிருந்த தினமலர் விளம்பர பேனர்கள் கழற்றி வீசப்பட்டன.
திமுக, இடதுசாரிக் கட்சிகள், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களும் தினமலருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழைகள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி கற்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடனும், பிராமணிய உயர்சாதி மனோபாவத்துடனும் செய்தி வெளியிட்ட ‘தினமலர்’ நாளிதழ், அந்தச் செய்தியை திரும்பப் பெற்று பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்; தினமலர் பத்திரிகையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இன்னமும் அந்த வன்மம் மறையவே இல்லை!
“உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவி டப் பேரியக்கம். ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தா லும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உரு வாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்தி லேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்ட னங்கள்!” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பேனாவில் அசிங்கத்தைத் தொட்டா எழுதுவது?
“யார் வீட்டுக் குழந்தைகளாக இருந்தா லும் இப்படி ஓர் இழிவான எண்ணம் தோன்றுமா நம் மனதில்! பார்ப்பனர்க ளுக்கென்றால் மட்டும் “பத்திரிகா தர்மம்“, “கருத்துச் சுதந்திரம்“ என்றெல்லாம் கச்சை கட்டி வருவார்களே, அவர்கள் இதற்கும் முன்வரிசை யில் வந்து பதில் சொல்வார்களா? நாமெல்லாம் எழுதுவதற்கான பேனாவில் மையைத் தொட்டுத் தான், மையை இட்டுத்தான் எழுதுகிறோம். ஆனால் இவர்களோ, அசிங்கத்தைத் தொட்டு அல்லவா தலைப்புச் செய்தியைத் தீட்டி மகிழ்கி றார்கள். இவர்களையெல்லாம் என்னவென்று அழைப்பது?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
வரலாற்றுப் போருக்கு ஆயுதத்தை கூர் தீட்டுவோம்!
“கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கி றது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்!” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “நம் வீட்டுப்பிள்ளைகள் பெறும் கல்வியின் வலிமை என்னவென்று அவர்களுக்குத் தெரி யும். சனாதனத்திற்கு எதிரான போரில் கல்வியே நமது ஆயுதம். அதை உணர்ந்திருக்கும் அற்பர் கூட்டம், பதற்றத்தில் தன் கீழ்த்தரத்தை வெளிக் காட்டுகிறது. நமக்கும் சனாதன ஒட்டுண்ணிக ளுக்கும் இடையில் தொடரும் வரலாற்றுப்போ ருக்கு நம் ஆயுதத்தைக் கூர்தீட்டுவோம்” என்று திமுக எம்.பி. கனிமொழி தமிழ்நாடு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
கல்வியைக் கண்டு அஞ்சும் சனாதனம்
“சூத்திரனுக்கு கல்வி தருவது புண்ணி லிருந்து வரும் சீழைக் குடிப்ப தற்குச் சமம்... என்று அன்று கூறியவர்கள் அதே வன்மத்தோடு இன்றும் உள்ளனர். பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமல ருக்குப் படுகிறது. சனாதனக் கருத்தியலின் பல்லைப் பிடுங்கும் கூரிய ஆயுதம் கல்வி. கற்போம். கற்பிப் போம்!” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.
நிரம்பி வழிவது வன்மமும், வக்கிரமும்தான்..
“செய்தியில் நிரம்பி வழிவது தினம லரின் ஏழைகளின் மீதான வன்ம மும் வக்கிரமும்தான். தினமலர் தமிழக மாணவர்க ளிடம் மன்னிப்புக்கோர வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க. கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
யாரும் பசியோடு இருக்கக் கூடாது
“காலை உணவுத் திட்டம் நல்ல திட்டம், இதில் மாற்று கருத்து கிடை யாது... குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை வரவேற்கிறேன்... யாரும் பசியோடு இருக்க கூடாது...” என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பட்டும் படாமல் கருத்து தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் 17 லட்சம் குழந்தைகள் பயன்
“மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்; ஊட்டச்சத்தை உயர்த்துதல்; வருகையை அதிகரித்தல்; வேலைக்கும் செல்லும் தாய்மார்க ளின் பணிச்சுமையை குறைத்தல்” ஆகியவையே தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டித் திட்டத்தின் நோக்கமாகவும் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைக ளுக்கு மட்டுமே இந்த திட்டத்தை 2022 செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு அரசு நடை முறைப்படுத்தியது. இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில், 2023 ஆகஸ்ட் 25 முதல் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 13.1.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படியே 2023 ஆகஸ்ட் 25 முதல் மாநிலம் முழுவதும் காலைச் சிற்றுண்டித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சிற்றுண்டி, கூடுதலாக 15 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 17 லட்சம் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரூ. 33.56 கோடி அள விற்கு ஒதுக்கப்பட்ட நிதி, 2023-24 ஆம் ஆண்டிற்கு 500 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கு பெற்றோர்கள் மத்தியி லும், குழந்தைகள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, அதிலும் தாமதமின்றி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மேலும் அவர்கள் உற்சாகத்துடன் பாடங்க ளைக் கற்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமலருக்கு ‘தினமலரே’ கண்டனம்
தினமலர் செய்திக்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த பத்திரிகை யின் ஆசிரியரான கி. ராமசுப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “தினமலர் ஈரோடு , சேலம் பதிப்புகளில் வெளியாகி உள்ள இந்த செய்தி ஏற்புடைய தல்ல; வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார். “கி. ராமசுப்புவை ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை, கோவை, மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை. திரு ஆர். சத்தியமூர்த்தியை ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு, சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது. தினமலர் ஏட்டின் சேலம், ஈரோடு பதிப்பை, கடந்த 23 ஆண்டுகளாக ஆர். சத்தியமூர்த்தி தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும் ‘தினமலர்’ பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கித் தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது” என்றும் அவரே குறிப்பிட்டுள்ளார்.