states

அரிசி, கோதுமை, பருப்புக்கு ஜிஎஸ்டி ரத்து

புதுதில்லி, ஜூலை 19 - சில்லரை விற்பனையில் வழங்கப் படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பேக்கிங் செய்யப்படாத மற்றும் பிராண்ட் அல்லாத சில்லரை  விற்பனை யில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12  வரை நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி திங்களன்று நாடாளுமன்றம் கூடியது. ஆனால், அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை எதிர்த்து இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தின. சாதாரண ஏழை - எளிய மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட் களுக்கு வரி விதிக்கப்பட்டதை ஏற்க  முடியாது என்றும்  அவற்றை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தொடரின் முதல்நாளே நாடாளு மன்றம் ஸ்தம்பித்தது. நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. செவ்வாயன்று அவை கூடிய  நிலையில், இரண்டாவது நாளாகவும் எதிர்க்கட்சிகள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். வழக்க மான அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, விலைவாசி உயர்வு பிரச்சனை பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

மாநிலங்களவையின் விதி 267-இன் கீழ் அலுவல் நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவிகித ஜிஎஸ்டி விதித்தது குறித்து  விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. எளமறம் கரீம் நோட்டீஸ் வழங்கினார். திமுக-வைச் சேர்ந்த திருச்சி சிவா எம்.பியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்தினார். அத்தியா வசிய பொருட்கள் மீது 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்தது குறித்து காங்கிரஸ்  உறுப்பினர் மாணிக் தாகூர் மக்களவை யில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் வழங்கினார். விளைபொருட் களுக்கு, குறைந்த பட்ச ஆதார விலை  குறித்த குழு தொடர்பாக விவாதிக்க வலி யுறுத்தி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சதா எம்.பி. மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார். ராணுவத்திற்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாதை திட்டம் குறித்து  காங்கிரஸ் எம்.பி தீபிந்தர் சிங் ஹூடா  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதற்கு அனுமதி வழங்காத நிலையில், எதிர்க்கட்சிகள் பதாகைகளை ஏந்தி  தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்த னர். இதனால் இரண்டாவது நாளிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. 

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தக்  கூடாது என்று மோடி அரசு தடை விதித்தி ருந்த நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிராக செவ்வாயன்று காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தி,  மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம், ஜிஎஸ்டி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நடப்புக் கூட்டத்தொடரில் மொத்தம் 32 மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நாடாளுமன்றமே நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செவ்வாயன்று மாலை டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.  அதில், “அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல்  பரப்ப வேண்டாம்” எனவும் “லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5 சதவிகித ஜிஎஸ்டி வரி  ஜூலை 18 முதல் நடைமுறைக்கு வந்துள் ளது” என்றும் கூறியுள்ளார். சில்லரை விற்பனையில் வழங்கப் படும் பேக்கிங் செய்யப்படாத மற்றும்  லேபிள் ஒட்டப்படாத உணவுப் பொருட் களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.  மேலும், எந்தெந்த உணவுப் பொருட்களுக்கு இந்த ஜிஎஸ்டி விலக்கு பொருந்தும் என்பதையும் அவர்  பட்டியலிட்டுள்ளார். அதில் அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் உள்ளிட்ட 11 உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.