நாகர்கோவில், ஏப்.20- கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பய ணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்ட பம் மற்றும் 133 அடி உயர திருவள்ளு வர் சிலையை நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். செவ்வாயன்று (ஏப்.19) காலை யில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து காலையில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடல் சீற்றம் தணிந்ததைத் தொட ர்ந்து 2 மணிநேரம் தாமதத்துக்குப் பிறகு காலை 10 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கி தொடர்ச்சி யாக மாலை 4 மணி வரை நடை பெற்றது.
இரண்டாவது நாளான புதன ன்றும் கடல் நீர்மட்டம் திடீர் என தாழ்வானது.இதைதொடர்ந்து காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து மதியம் வரை தொடங்கப்பட வில்லை. கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக புதனன்று காலை 8 மணி முதல் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அதன் நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகை வைத்துள்ளது. கடல் நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் கன்னியாகுமரி யில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைக்கண்டு அச்சமடைந்த சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி கால் நனைப்பதற்கே தயங்கினர். கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்து சுற்றுலா பகுதி போலீசார் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதித்தனர்.