states

மோடிக்கு எதிராக ஆந்திராவில் கறுப்பு பலூன்கள்!

அமராவதி, ஜூலை 4- ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில், விடுதலை போராட்ட வீரர் அல்லூரி சீதா ராம ராஜூவின் 125-வது பிறந்த  நாளின் ஓராண்டு கால விழா வை முன்னிட்டு, 30 அடி  உயர வெண்கல சிலையை  பிரதமர் மோடி திங்களன்று திறந்து வைத்தார். இந்நிலை யில், ஆந்திர பிரதேசத்தில் சுற்றுப் பயணம் முடித்து பிர தமர் மோடி ஹெலிகாப்டரில்  புறப்பட்டு சென்றதும், காங் கிரஸ் கட்சி தொண்டர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்  கும் வகையில் கறுப்பு பலூன் களை வானில் பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக 4 காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.