இராமநாதபுரம், ஜூலை 30- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை இராமேஸ்வரத்தில் சனிக்கிழமையன்று துவக்கி வைக்கப்பட்டது. யாத்திரையை எப்படியாவது பிரபல மாக்க வேண்டும். மக்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். முதுகுளத்தூர் காந்தி சிலை பகுதி யில் பாஜகவினர் கூடினர். இப்பகுதி பிர தான சாலை என்பதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, அந்தப் பகுதியில் பேருந்துகளை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். கமுதி டிஎஸ்பி மணிகண்டன் தலை மையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பேருந்துகள் செல்ல நட வடிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமர்பிர சாத் ரெட்டி, பேருந்தகளை நிறுத்தி ரகளை யில் ஈடுபட்டதோடு, டிஎஸ்பி மணிகண்ட னுடன் தகராறில் ஈடுபட்டு கடும் வாக்கு வாதம் செய்தார். பேருந்துகளை இயக் கக்கூடாது என்று கையை உயர்த்தி கோப மாக பேசினார். பாஜகவினரின் ரகளையால் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தகள் நிறுத் தப்பட்டன. பெண்கள் கைக்குழந்தை களுடன் சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர்.