states

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் பாஜக அரசு : காதர்மொய்தீன்

புதுக்கோட்டை, ஜூலை 21 - அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் என்ற முறையில் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றேன். பாஜக அரசின்  மக்கள் விரோத செயல்களை பொதுமக்களி டம் எடுத்துக் கூற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. தற்போது பாஜக அரசு இந்திய அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்தவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளுநர்களை வைத்து அனைத்து அசம்பாவிதங்களையும் செய்து வருகிறது.  ‘இந்தியா’ என்ற பெயர் அனைவரை யும் கவரும் வகையில் இருந்ததால் தலை வர்கள் அதை தேர்ந்தெடுத்துள்ளனர். மாநி லங்களுக்கு மாநிலம் இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கிடையே சிற்சில வேறு பாடுகள் இருக்கலாம். ஆனால் நாடாளு மன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து  பணியாற்றுவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.

மனித குலத்திற்கே இழிவானது

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.  பாஜகதான் அந்த மாநிலத்தை ஆளு கிறது. அங்கு இரு பெண்களை நிர்வாண மாக்கி அழைத்துச் சென்ற சம்பவம் தேசத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனித குலத்திற்கே இழிவான செயல். இது  மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்ப வத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இந்தியா என்பது அனைவருக்கும் சமமானது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது சிறப்பு. இந்தியாவை இந்துத்துவ நாடாக்குவதற்காக பாஜக பாடுபடுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.