நாகப்பட்டினம், டிச.14- பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்த மான நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. நாகப்பட்டினத்தின் பாஜக மாவட்டத் தலைவராக இருப்பவர் கார்த்திகேயன். இவ ருக்கு சொந்தமான கார்த்திகேயன் நர்சிங் கல்லூரி புத்தூரில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பணிபுரியும் உடற்கூறி யியல் ஆசிரியர் சதீஷ் என்பவர், மாணவி ஒரு வரிடம் தன் விருப்பத்திற்கு இணங்க வேண் டும் என கட்டாயப்படுத்தும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் கல்லூரி நிர்வாகத்தினர் பாதிக் கப்பட்ட மாணவிகளை மிரட்டி புகார் கொடுக்க விடாமல் தடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் தாய், தந்தையரை அழைத்து சமாதான பேச்சு நடத்துவது போல் மிரட்டி உள்ளனர். ஆடியோ வெளியானதையடுத்து மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டு கல்லூரி யில் பயின்ற மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, மாண விகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகள் இதே கல்லூரி நிர்வாகத்தில் கல்வி யியல் கல்லூரியும் இயங்கி வருகிறது. இக் கல்லூரியிலிருந்து பாரதிதாசன் பல்க லைக்கழகத்தின் மூலம் செயல்படும் அரசு கலைக் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற 63 மாணவிகளில் 10 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி தேர்வு எழுதும் மையத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இவ் வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் கல்லூரி யின் மீது எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் த.லதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திர போஸ், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் அருள்தாஸ், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் இதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.