states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘விஜய் படங்களை பார்க்க வேண்டாம்’ - ஆதீனம் பேச்சு!

நடிகர் விஜய் படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது என்று மதுரை ஆதீனம் ‘உத்தரவு’ போட்டுள்ளார். மதுரையில் விஎச்பி சார்பில் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் பேசியிருக்கும் மதுரை ஆதீனம், நடிகர் விஜய்யின் படங்கள் இந்துக்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக வும், எனவே அவரது படங்களை பார்க்காதீர்கள் எனவும் கூறியுள்ளார். “சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்கக் கூடாது?” எனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது: ராகுல் டுவீட்!

முகமது நபி குறித்து பாஜக தலைவர்கள் அவதூறான கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஈரான், கத்தார், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. இதனையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வெறுப்பு வெறுப்பைத்தான் ஈன்றெடுக்கும். அன்பும், சகோதரத்துவமும் நிறைந்த பாதைதான் இந்தியாவை முன்னேறச் செய்யும். இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது” என்று குறிப்பிட்டு ‘இந்தியாவை ஒன்றிணைப்போம்’ (#BharatJodo) என்ற ஹேஷ்டேக்குடன் அந்த டுவீட்டை ராகுல் பகிர்ந்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன்: ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு!

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தி ருந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது நீதிபதி பூனம் ஏ பம்பா முன்னிலையில் திங்களன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ராம்பூர், ஆசம்காரில் போட்டியில்லை: காங்கிரஸ் அறிவிப்பு

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் அகிலேஷ், ஆசம்  கான் ஆகியோர் தாங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஏற்கெனவே வகித்து வந்த மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, ராம்பூர் மற்றும் ஆசம்கார் தொகுதிகளுக்கு ஜூன் 23ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2024-இல் நடக்கும் மக்களவை பொதுத்தேர்தலே தங்களது இலக்கு என காங்கிரஸ் கட்சி தெரி வித்துள்ளது. இதேபோல பகுஜன் சமாஜ் கட்சியும் ராம்பூரில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.

ஒரே வேட்பாளரை ஆதரிக்கும் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி!

ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் ஜூன் 10 அன்று நடக்கிறது. இதில், காங்கிரசுக்கு 2 இடங்களும், பாஜக-வுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி விட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு பிரபல தொலைக்காட்சி உரிமையாளர் சுபாஷ் சந்திராவை, பாஜக சுயேச்சையாக களமிறக்கி உள்ளது. இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு  பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற 6 எம்எல்ஏ-க்களையும், சுபாஷ் சந்திரா வுக்கு வாக்களிக்குமாறு பகுஜன் சமாஜ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த 6 எம்எல்ஏ-க்களும் கடந்த 2019-ஆம் ஆண்டே காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் கவிழ்ந்து சார்தாம் யாத்திரை பக்தர்கள் 26 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றுக்கான ‘சார்தாம் யாத்திரை’ துவங்கி நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள டம்டா அருகே யமுனோத்ரி கோயிலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, ரிக்காவ்காத் என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, கீழே உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருண்டது. இதில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது. 

சத்யேந்திர ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

ஹவாலா பணப் பரிவா்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை, கடந்த மே 30 அன்று அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், சத்யேந்திர ஜெயின்  வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை யன்று காலை சோதனை நடத்தினர். ஏற்கெனவே, சத்யேந்திர ஜெயினை ஜெயின் ஜூன் 9 வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்! 

“காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மகாராஷ்டிராவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், மகாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார். “காஷ்மீர் பண்டிட்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படும். என முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால்  அதே நேரத்தில் அங்கிருந்து வெளிவரும் தகவல்கள், அங்கு நிலவும் சூழல் என எதுவுமே சரியான தாக இல்லை. காஷ்மீரில் நிலவி வரும் சூழலை கண்டு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்” என ஆதித்ய தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

ஜோக்கர்களுக்கு ஆர்எஸ்எஸ் உடன் நேரடி தொடர்பு!

காசி, மதுரா மற்றும் குதுப்மினார் பிரச்சினைகளை எழுப்பும் அனைத்து ஜோக்கர்களுக்கும் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்.) நேரடி  தொடர்பு உள்ளது என மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். “கோட்சேவையும் அவரது நண்பர் சாவர்க்கரையும் யாருக்காவது நினைவிருக்கிறதா? பாபர் மசூதி போராட்டத்தின் போது கூட சிலர் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம் என்றும் சிலர்  இது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும் கூறினர். இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்” என்றும் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

காந்தி படத்தை மாற்றும் திட்டம் இல்லை 

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம்  இடம்பெறும் என்ற தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. காந்தியின் படம் மாற்றப்படாது, அவ்வாறு மாற்ற வேண்டும் என எந்த கோரிக்கையும் வரவில்லை. ரூபாய் நோட்டு களில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய நாணயங்கள் வெளியீடு 

தில்லியில் நடைபெற்ற நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரம்  என்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பார்வை குறைபாடு உள்ள வர்கள் எளிதில் அடையாளம் காணும் விதமாக புதிய நாணயங்களின் தொகுப்பை வெளியிட்டார். இந்திய விடுதலையின் 75-வது முத்திரையுடன் புதிய நாணயங்களான ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். 


அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களை விட்டு வெளியேறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவே இந்த ஒருநாள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் முடிவுக்கு வர வேண்டும். இவற்றையெல்லாம் நாம் ஏன் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிய வில்லை என்று பல மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பட்டினிக் கொடுமை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், ஊட்டச்சத்து இன்மை மற்றும்  குழந்தைகள் உயிரிழப்பு போன்றவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையும், சோமாலியா  அரசும் தெரிவித்துள்ளன. விவசாய உற்பத்தி பொய்த்துப் போனால் செப்டம்பரில் கடுமையான நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று ஐ.நா சபை மற்றும் சோமாலியா அரசு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

அல்பேனியாவின் புதிய ஜனாதிபதியாக பைஜ்ரம் பேகஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக இவர் அல்பேனிய ராணுவத்தின் தளபதியாகப் பணியாற்றி னார். அல்பேனியா நாடாளுமன்றத்தில் மொத்தம் 140 உறுப்பினர்கள் உள்ளனர். புதிய ஜனாதிபதியைத் தேர்வு  செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்தபோது 103 உறுப்பினர்கள்  மட்டுமே  இருந்தனர். அவர்களிலும் 83 மட்டுமே வாக்களித்த னர். இதில் 78 பேர் பைஜ்ரமுக்கு ஆதரவாகவாக்களித்தார்கள்.