புத்தாக்க நிறுவனங்களுக்கு (வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தரு வதில் மிகச் சிறந்து விளங்கும் மாநி லங்கள் பட்டியலில் தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநிலங்கள் இடம் பிடித் துள்ளன. மொத்தம் 33 மாநிலங்களும், யூனி யன் பிரதேசங்களும் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில், குஜராத் தொடர்ந்து 4-வது முறையாகவும், கர்நாடகா 2-வது ஆண்டாகவும் இடம் பிடித்து உள்ளன.
தமிழ்நாடு 3-ஆவது இடமும், கேரளம் நான்காமிடமும், இமாச்சல பிரதேசம் ஐந்தாமிடமும் பெற்றுள்ளன. மத்திய தொழில் நிறுவனங்கள் மற் றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக் கான (டி.பி.ஐ.ஐ.டி.) துறை இந்த தர வரி சைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இவற்றுக்கு அடுத்ததாக சிறந்த மாநி லங்கள் வரிசையில், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங் கானா, அருணாசல பிரதேசம், மேகா லயா ஆகிய மாநிலங்களும், முதன்மை மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, அசாம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிர தேசம், உத்தரகண்ட், கோவா, மணிப் பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களும், ஆர் வம் காட்டும் மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஹரியானா, அந்தமான்-நிகோ பார் தீவுகள், நாகாலாந்து ஆகியவையும், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர், தில்லி, ஜம்மு - காஷ்மீர், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம் ஆகியவை யும் இடம் பெற்றுள்ளன.