சென்னை, ஜன.16- பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க 14 மாவட்டங்களில் தடுப்பான்கள் அமைக்கும் பணிக்காக அரசு ரூ.1675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் இத்திட்டத்தை சிறப்பாக செய்ய அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று சுற்றுசூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் கடலோரப் பகுதிகளையும் உயிரி னங்களையும் பாதுகாக்கும் வகையில் ரூ.1,675 கோடி செலவில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனசெயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில், கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசு பாட்டை குறைக்கவும், கடல் உயிரியல் பன்முகத் தன்மையை பாதுகாக்கவும், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற திட்டத்தை ரூ.2ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுடன் அடுத்த 5ஆண்டுகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா அமைத்தல்; நாகை மற்றும் சென்னையில் கடல் ஆமை கள் பாது காப்பு மய்யம் அமைத்தல்: கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு மய்யத்தை தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைத்தல்; பள்ளிக்கரணை உள் ளிட்ட கடலோர சதுப்பு நிலங்களை மீட்டெடுத் தல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படும். இந்த 5 பிரிவின்கீழ் வரும் திட்டங்களை செயல்படுத்த ரூ.1.675 கோடி தொகை செலவாகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் விழுந்து, இறுதியாக கடலில் சென்று சேருகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், கடலோர மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நதிகள் வழியாக பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சென்று சேருவதை தடுக்க 14 மாவட்டங்களில் தடுப்பான்கள் அமைக்கும் பணிக்காக அரசு ரூ.1675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்வர் இத்திட்டத்தை சிறப்பாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.