சென்னை,ஏப்.23- உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பு களுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்பு கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்பு களாக அறிவிக்கக் கோரி விண்ணப் பிக்கப்பட்டது. இதில் 3 அணைகளை தேர்வு செய்து விருதுகளை சர்வதேச நீர்பாசன மற்றும் வடிகால் ஆணையம் அறிவித் துள்ளது.