states

ஆக.9 சென்னை போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்பு

தேனி, ஆக.3- தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன கூட்டம் ஆகஸ்ட் 3 அன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.முத்துச்சாமி தலைமை வகித்தார்.  மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. விசைத்தறி தொழில் ஒன்றிய மோடி அரசின் கொள்கை யால் நலிவுற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானம் இல்லாமல் மிகுந்த துயரத்தில் உள்ளனர். கந்துவட்டிக்கு கடன்  வாங்கி கட்ட முடியாமல் பலர் தற்கொலை செய்துள்ள னர். எனவே, மோடி அரசும், தமிழக அரசும் விசைத்தறி தொழில் மற்றும் தொழிலாளர்களையும் பாதுகாக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், 8 மணி நேரம் வேலை, மாத ஊதியம் ரூ.26 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.8 ஆயி ரம் விலை உயர்வை கட்டுப்படுத்துவது போன்ற 12 அம்ச  கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய பிரச்சார  இயக்கம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து  ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் பெருமளவு பங்கேற்பது, மேலும் சிஐடியு விவசாய அமைப்புகள் சார்பில் விடியலை  நோக்கி இந்தியா என்ற தலைப்பில் நாடு முழுவதும் ஆகஸ்ட் 14 அன்று நடைபெறும் இயக்கங்கள் மாவட்டங்க ளில் நடைபெறும். இதில் விசைத்தறி தொழிலாளர்கள் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத கலவரம் பற்றியெரிகிறது. மணிப்பூர் பாஜக அரசையும், ஒன்றிய மோடி அரசையும் கண்டிப்பதுடன் உடனடியாக மாநி லத்தில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டிபட்டி பகுதியில் அரசு நெசவு பூங்கா அமைக்க  கட்டுமான பணிகள் துவங்கி முழுமையாக பணிகள் முடியா மல் உள்ளது. உடனடியாக முடிக்க வேண்டும். தென்காசி,  சங்கரன்கோவில் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு உடன்பாடு ஒப்பந்தம் போட்ட பின்பும், அமலாக்காமல் உள்ளனர். தமிழக அரசு தலை யிட்டு ஒப்பந்த கூலி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.