திருநெல்வேலி,செப்.18- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷ்யாவில் இருந்து தூத்துக் குடி துறைமுகத்திற்கு வந்தன. அங்கிருந்து 2 ஜென ரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் செப்டம்பர் 7 ஆம் தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழு வை கப்பல் மூலமாக கூடங் குளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது தரை தட்டி, சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகரித் துள்ளதால் மிதவை கப்ப லில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த கப்பல் கடலில் மூழ்க தொடங்கி உள்ளதால், நீராவி கொள்கலன்களும் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை அமை த்து ராட்சத கிரேன் மூலமாக கொள்கலனை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதனால் ரூ.2 கோடி செலவில் அங்கு சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.