states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சட்டம், ஒழுங்கு முதலமைச்சர் ஆய்வு

சென்னை, ஜூன் 4 - சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச் சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோ சனை கூட்டம் தலைமை செயலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 3) நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் இறை யன்பு,காவல்துறை தலைமை இயக்குநர்  சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்த நிலை யில் இந்த கூட்டம் நடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  13 மாவட்டங்களில் 

13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை, ஜூன் 4- தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் (ஜூன்5,6) (நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக் கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி, சேலம், திருப்பத்தூர், சேலம், வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதைப்போன்று வரும் 7 மற்றும் 8-ம் தேதி தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி,  மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு  பொறியாளர்களுக்கு சேட்லைட் அலைபேசி

சென்னை, ஜூன் 4- முல்லைப் பெரியாறு அணை, பெரியாறு அணை முகாம், தேக்கடி முகாம் பணியாளர்களுக்கு செயற்கைக்கோள் அலைபேசிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். முல்லைப் பெரியாறு அணையில் தரைவழி தொலைபேசி இணைப்பு இல்லாத காரணத்தால் பேரிடர் காலங்க ளில் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழையளவு போன்ற  விபரங்களை உயர் அலுவலர்களுக்கும், தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்க ளுக்கும், பேரிடர் மேலாண்மை அலுவல கத்திற்கும் தகவல் தெரிவித்து தக்க ஆலோ சனைகள் பெற்று வெள்ள மேலாண்மை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது. மேலும், முல்லைப் பெரியாறு பிரதான  அணைக்கு படகில் 14 கி.மீ தூரம் பயணம்  செய்யும்போது ஆள் நடமாட்டம் இல்லாத  அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும்போது  அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நீர் வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகி யோர் பெரியாறு அணையை பார்வை யிட்டு ஆய்வு செய்தபோது செயற்கைக் கோள் அலைபேசி வழங்கிட முடிவு எடுக்கப் பட்டது. இதன்படி இந்த தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில்  9 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை, ஜூன் 4- சென்னை விமானநிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் தங்கத்தை கடத்தி வந்த வர்கள் அதை கழிவறையில் பதுக்கி வைத்த னர். சுங்க இலாகா அதிகாரிகள் விமான  நிலைய கழிவறையில் மேற்கொண்ட  சோதனையில் 9.02 கிலோ எடை கொண்ட தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.4.21 கோடி ஆகும்.