நாகர்கோவில், ஜுலை 31- இந்திய மாணவர் சங்கம் நடத்தும் கல்வி யை பாதுகாப்போம், அரசியல் அமைப்பு சட்டத்தினைப் பாதுகாப்போம், தேசத்தைப் பாதுகாப்போம்... ஆகிய முழக்கங்களை முன்னிறுத்தி அகில இந்திய பிரச்சார நெடும் பயணம் தேசத்தின் தெற்கு எல்லையான குமரி முனையில் இருந்து திங்களன்று (ஜுலை 31) துவங்குகிறது. இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி ஷானு தலைமை யில் இப்பயணம் நடைபெற உள்ளது. கந்தர்வ கோட்டை தொகுதி எம்எல்ஏ சின்னதுரை துவங்கி வைக்கிறார். இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் நாடு மாநில செயலாளர் மாரி யப்பன், மாநில தலைவர் ஏடி கண்ணன், கேரள மாநில தலைவர் அனுஸ்ரீ, துணை தலை வர் வ. வினீஷ் உள்ளிட்டோர் கலந்து கொள் கின்றனர். இப்பயணம் செப்டம்பர் 18 வரை நடைபெற உள்ளது.